பூனையை காப்பாற்ற சிறுவனை கயிறு கட்டி இறக்கிய மூதாட்டி

சீனாவில் ஆபத்தில் இருந்த பூனையை காப்பாற்ற ஐந்தாவது மாடியிலிருந்து சிறுவனே கயிறு கட்டி இறக்கிய மூதாட்டிக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

சீனாவின் சிச்சுவான் மாவட்டத்தை சார்ந்த தான் என்ற மூதாட்டி, தனது ஏழு வயது பேரனுடன் வசித்து வருகிறார்.

அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாவது தளத்தில் வசித்து வரும் அவர், நான்காவது தளத்தில் ஆபத்தில் சிக்கி இருந்த பூனையை மீட்பதற்காக தனது ஏழு வயது பேரனை கயிறு கட்டி காப்பாற்றினார். நல்லவேளையாக அந்த சிறுவனுக்கு எத்தகைய காயமும் ஏற்படவில்லை. இதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட பல்வேறு தரப்பில் இருந்தும் அந்த மூதாட்டிக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

ஆனால் மூதாட்டியோ, அந்த நேரத்தில் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. அதனால் பேரனை கயிறு கட்டி இருக்கினேன். மேலும் வீடியோவில் அதை பார்க்கும் போதுதான் ஆபத்தை உணர்ந்தேன் எனக் கூறியுள்ளார்.

Exit mobile version