அரசின் திட்டங்களைப் பட்டியலிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையைச் சமாளிக்கக் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டம், புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையைத் திறந்துவைத்த பின் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மழைநீர் சேகரிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டம் ஆகியவற்றையும் அரசு செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். மழைக்காலத்தில் வரும் நீரைத் தேக்கும் வகையில் கண்ணன்கோட்டை, தேர்வாய்கண்டிகை புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Exit mobile version