ஆணவப்படுகொலைக்கு ஆளான குடும்பத்திற்கு அரசின் இலவச வீட்டுமனை பட்டா

ஓசூர் அருகே ஆணவப்படுகொலைக்கு ஆளான குடும்பத்திற்கு அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சூடுக்கொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நந்தீஷ் மற்றும் சுவாதி ஆகியோர் காதலித்து கலப்பு திருமணம் செய்துகொண்டனர். ஆனால் கடந்தாண்டு நவம்பர் மாதம் இருவரும் கடத்தி ஆணவப்படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், நந்தீஷ் குடும்பத்தினர் தங்களுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் இருப்பதாக ஆட்சியரிடம் முறையிட்டிருந்தனர். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, நந்தீஷ் குடும்பத்தினருக்கு இலவச பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பட்டாவை பெற்றுக்கொண்ட நந்தீஷ் குடும்பத்தினர் விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், தமிழக அரசிற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

Exit mobile version