"பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்க வேண்டும்"

பத்திரிகையாளர் நலவாரியத்தை விரைவில் அமைத்து அவர்களின் நலன் காக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை 4 முறை உயர்த்தி பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கியது அதிமுக அரசு என்று பெருமிதம் தெரிவித்தார்.

பத்திரிகையாளர் நலவாரியம் குறித்து கொள்கை விளக்க குறிப்பில் எதுவும் குறிப்பிடவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர்,

பத்திரிக்கையாளர் நலவாரியத்தை விரைவில் அமைத்து அவர்களின் நலன் காக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தினார்.

 

Exit mobile version