பொங்கல் பரிசு வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்

மேல் முறையீடு செய்வதன் மூலம் சாதகமான தீர்ப்பை பெற்று அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி அடுத்த வானரமுட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, 370 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஜெயலலிதா அறிமுகப்படுத்திய திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரிவாக்கம் செய்து, காலத்துக்கு தகுந்தாற்போல் பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் வழங்கி நடைமுறைப்படுத்தி உள்ளதாக கூறினார்.

இந்த திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதுடன் சாதகமான தீர்ப்பை பெற்று, அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version