இறப்பு சதவீதத்தை குறைப்பதற்கு அரசு அதிக கவனத்தை செலுத்த வேண்டும்- முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில், இறப்பு சதவீதத்தை குறைப்பதற்கும், கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்துவதிலும் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து மருத்துவமனை முதல்வரிடம் கேட்டறிந்த முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர், ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் இரண்டாவது அலை குறைந்து வரும் வேளையில், இறப்பு சதவீதத்தை குறைப்பதற்கு அரசு அதிக கவனத்தை செலுத்த வேண்டும் என்றார். கிராமப்புறங்களில் கூடுதல் கவனம் செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்துவதற்கு அரசு கவனம் செலுத்தவேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.

Exit mobile version