கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டது – ஐ.சி.எம்.ஆர். மருத்துவர்கள் பாராட்டு!

கொரோனா தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஐ.சி.எம்.ஆர். மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்தனர். ஐ.சி.எம்.ஆர். நிறுவனத்தைச் சார்ந்த, சென்னை-தேசிய தொற்று நோய் நிறுவனத்தின் இயக்குநரும், கோவிட்-19 தேசிய பணிக்குழுவைச் சேர்ந்த முன்னணி உறுப்பினருமான டாக்டர் மனோஜ் முரேக்கர், துணை இயக்குநர் பிரதீப் கவுர் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நேற்று தலைமைச் செயலகத்தில், சந்தித்தனர். அப்போது, கொரோனா பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளுக்காக அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Exit mobile version