குண்டர் சட்டம் பிரச்சனை – நீதிபதிகள் கேள்விக்கு தமிழக அரசு விளக்கம்

குண்டர் சட்ட உத்தரவை அரசு நேர்த்தியாக பிறப்பித்தாலும் கூட, சாதாரண காரணங்களுக்காக அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படுவதாக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக வேலூரைச் சேர்ந்த அமர்நாத் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவரது மனைவி சவுஜன்யா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், கடந்த 10 ஆண்டுகளில் ரேசன் அரிசி கடத்தியது தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டோர் குறித்து கேள்வி எழுப்பினர்.

இது குறித்து விளக்கம் அளித்த தமிழக அரசு, இந்த ஆண்டு இதுவரை 53 பேர் கைதாகியுள்ள நிலையில், 10 பேரை அறிவுரை கழகமும், 42 பேரை உயர் நீதிமன்றமும் விடுவித்து விட்டதாக தெரிவித்தது. நேர்த்தியாககுண்டர் சட்ட உத்தரவை அரசு பிறப்பித்தாலும், சாதாரண காரணங்களுக்காக நீதிமன்றத்தால் அது ரத்து செய்யப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

 

Exit mobile version