ஒருமித்த கருத்துள்ள கட்சிகளின் ஆட்சியே தமிழகத்திற்கு நலன் : முதல்வர்

திமுகவில் தலைவர் முதல் தொண்டர் வரை அனைவருக்கும் பொய்யைத் தவிர வேறெதுவும் பேசத் தெரியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் செய்தார்.

வள்ளியூரில் வாக்குசேகரித்த முதலமைச்சர், மத்தியிலும், மாநிலத்திலும் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளின் ஆட்சியே தமிழகத்திற்கு நலன் கிடைக்கும் என்றார்.

Exit mobile version