2021 தேர்தலிலும் வெற்றி பெறுவதே இலக்கு – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

2021ம் ஆண்டிலும் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதே தொண்டர்களின் ஒரே இலக்காக இருக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில், அஇஅதிமுக நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். சமூக இடைவெளியை கடைபிடித்து நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்குமார், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம் சையது கான் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் உரையாற்றிய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கூறியது போல, இன்னும் 100 ஆண்டுகள் அஇஅதிமுக ஆட்சியில் இருக்க வேண்டும் என்று உணர்வுப்பூர்வமாக பேசினார். 2021 தேர்தலிலும், ஆட்சியைப் பிடிப்பது தான் இலக்காக இருக்க வேண்டும் என்றும், இதற்காக தொண்டர்கள் அனைவரும் தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version