ஜிசாட்-11 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

அதிவேக இணைய சேவைக்காக தயாரிக்கப்பட்ட ஜிசாட்-11 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, இந்தியாவில் அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட, ஜிசாட்-11 என்ற செயற்கை கோளை வடிவமைத்தது. இந்த செயற்கை கோள் கடந்த மே மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது.

ஆனால், மார்ச் மாதம் ஜிசாட்-6ஏ செயற்கைகோள் செலுத்தப்பட்டதால், ஜிசாட்-11 செயற்கைகோள் ஏவுவது ஒத்தி வைக்கப்பட்டடது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள கயானாவில் இருந்து ஜிசாட்-11 செயற்கைகோள் ‘ஏரைன்-5’ என்ற ராக்கெட் மூலம், அதிகாலை 2.07 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. 5 ஆயிரத்து 854 கிலோ கிராம் எடைகொண்ட இந்த ஜிசாட்-11, அடுத்த தலைமுறைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version