கொள்ளையனை தைரியமாக எதிர்கொண்ட சிறுமி : CCTV காட்சி இணையத்தில் வைரல்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே, செல்போனை பறிக்க முயன்ற கொள்ளையனை 15 வயது சிறுமி தைரியமாக எதிர்கொண்ட காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜலந்தரை சேர்ந்த குஷூம் குமாரி, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில், பின் சீட்டில் அமர்ந்திருந்த நபர் குமாரியின் கையில் இருந்த செல்போனை பறிக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட சிறுமி குமாரி, இருசக்கர வாகனத்தில் இருந்த நபரின் கையை பிடித்துக் கொண்டே ஓடினார். கொள்ளையனை தைரியமாக எதிர்கொண்ட சிறுமி, தமது செல்போனை மீட்டார். அதற்குள் சம்பவத்தை கண்ட பொதுமக்கள், கொள்ளையனை சுற்றிவளைத்தனர். இதுகுறித்த சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில், கொள்ளையன் அவினாஷ் குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். தப்பியோடிய அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.

Exit mobile version