பழனி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

பழனி அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றதில், அங்கு, சிறுமி ஆறுமாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

பின்னர், இது குறித்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய போலீசார், இதற்கு காரணமான, சிறுமியின் தாய் மாரியம்மாளின் 2ஆவது கணவர் காமராஜை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Exit mobile version