கைதிகளால் தயாரிக்கப்பட்ட ஆடை, இனிப்பு வகைகளை ஆர்வத்துடன் வாங்கும் பொதுமக்கள்

தமிழக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளால் தயாரிக்கப்பட்ட ஆடை, எண்ணெய் மற்றும் இனிப்பு வகைகள் ஆகியவை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள கைதிகள் வெளியே வருகிற போது அவர்களுக்கான சுய தொழிலை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் சிறைத்துறை நிர்வாகம் அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளித்து வருகிறது. அதன் அடிப்படையில் உணவுப்பண்டங்கள் முதல் கைவினைப் பொருட்கள் வரை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இவை சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை என ஐந்து நாட்களுக்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Exit mobile version