ஆன்லைனில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து ரூ.15 கோடி வசூல் செய்த கும்பல் தலைமறைவு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஆன்லைனில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து ஆயிரத்து 300 பேரிடம் 15 கோடி வசூல் செய்து தலைமறைவான கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இங்குள்ள வடக்குப்பேட்டை பகுதியில் தனியார் நிறுவனமான குவாலிட்டி டிரேடர்ஸ் என்ற நிறுவனம் பல்வேறு வகையான மருந்துகளை டீலர்கள் மூலம் விற்பனை செய்து வந்தது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால், 100 நாட்களில் ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 500 வீதம், 2 லட்சத்து 50 ஆயிரம் வழங்குவதாக கவர்ச்சிகரமான விளம்பரத்தை அளித்திருந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நிறுவனத்தின் உரிமையாளர்கள் 3 பேரை தேடி வருகின்றனர்

Exit mobile version