திருப்பூரில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய ESI மருத்துவமனைக்கு அடிக்கல்

சென்னை ஏ.ஜி.டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக கொடியசைத்து துவக்கி வைத்தனர். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, திருப்பூரில் அமைக்கப்பட இருக்கும் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய இ.எஸ்.ஐ மருத்துவமனை, திருச்சியில் நவீனப்படுத்தப்படும் விமான நிலைய கட்டிடம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதனை தொடர்ந்து சென்னை ஏ.ஜி.டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக கொடியசைத்து துவக்கிவைத்தனர்.

Exit mobile version