முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழு உருவச் சிலை திறப்பு

வருமுன் காப்பது, குறைந்த செலவிலான மருத்துவ வசதிகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்வது ஆகியவற்றை இலக்காகக் கொண்டு தமது அரசு செயல்பட்டு வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95ஆவது பிறந்த நாளையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள லோக் பவனில் அவரது முழு உருவச் சிலையைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Exit mobile version