மாணவர்களிடையே கால்பந்து ஆர்வத்தை தூண்டும் வகையில் நடத்தப்படும் கால்பந்து தொடர்

பள்ளி மாணவர்களிடையே கால்பந்து ஆர்வத்தை தூண்டும் வகையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி மேனிலைப்பள்ளி மைதானத்தில் கால்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்டங்களுக்கிடையே நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 26 அணிகள் பங்கேற்றுள்ளன. நாக் அவுட் முறையில் கால்பந்து போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறும் என அறிவிக்கபட்டுள்ளது. இத்தொடரின் இறுதிப் போட்டி வருகின்ற ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது

Exit mobile version