தமிழர்களின் இரத்த மரபணுவில் தொழில் மரபுகள் உள்ளதற்கு கீழடி முடிவுகளே சான்று: அமைச்சர் பாண்டியராஜன்

தமிழர்களின் இரத்த மரபணுவில் தொழில் மரபுகள் உள்ளது என்பதற்கு கீழடி அகழ்வாராய்ச்சி ஆய்வு முடிவுகளே சான்று என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை தியாகராசர் கல்லூரியில், தமிழிசை ஆய்வு மையத்தின் சார்பில், தமிழிசை பேரகராதி நூல் மற்றும் குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது. அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்று தமிழிசை பேரகராதி நூல் மற்றும் குறுந்தகட்டை வெளியிட, அமெரிக்காவை வாழ் தமிழர் பாண்டியன் பெற்றுக்கொண்டார். இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், தமிழ் பண் எந்த அளவிற்கு இந்துஸ்தானி இசையில் உள்ளது என்பதை பள்ளி மாணவர்களுக்கு எடுத்து செல்வோம் என்று கூறினார்.

Exit mobile version