அரியலூர் மாவட்டத்தில் விவசாய நிலத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

ஜெயங்கொண்டம் அருகே விவசாய நிலத்தில் புகுந்த முதலையை வனத்துறையினர் உயிருடன் மீட்டு கீழணையில் விட்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலி கிராமத்தை சேர்ந்த அருள் என்பவர் தனது விவசாய நிலத்திற்கு, விவசாய பணிகளை பார்வையிடுவதற்காக சென்றார். அப்போது அருகில் செல்லும் ஓடை அருகே முதலை ஒன்று இருப்பதை கண்டு அச்சம் அடைந்தவர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் முதலையை உயிருடன் மீட்டு அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் பத்திரமாக விட்டனர். இதனால் ஊருக்குள் பரபரப்பு தொற்றியது

Exit mobile version