தமிழகத்தில் முதல் முறையாக மாணவர் காவல் படை தொடக்கம்

தமிழகத்தில், முதல் முறையாக சென்னையில், மாணவர் காவல் படை என்ற புதிய படையை, பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையரகத்திலுள்ள கலந்தாய்வு கூடத்தில், மாணவர் காவல் படையை தொடங்கி வைத்து, அவர்களுக்கான சீருடை உள்ளிட்ட உபகரணங்களை காவல்துறை ஆணையர் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் முதல்முறையாக, சென்னையில், மாணவர் காவல் படை என்ற புதிய படை தொடங்கப்பட்டுள்ளது என்றார். அரசு பள்ளிகளில் படிக்கும் 8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, சாலை பாதுகாப்பு, பாலியல் தொடர்பான குற்றம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார்.

Exit mobile version