2019ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரியலூரில் துவங்கியது

2019ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரியலூரில் துவங்கியது. அரியலூர் மாவட்டம் மலத்தான்குளத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2019ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து அலங்கரித்து கொண்டு வரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன.

300 மாடு பிடி வீரர்கள் போட்டியில் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளிக் காசு போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. 2019ஆம் ஆண்டில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் மலத்தான்குளத்தில் குவிந்தனர்.

 

 

Exit mobile version