செப். 14-ம் தேதி முதல் 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி தொடங்கி, 3 நாட்கள் நடைபெறுகிறது.

தனி மனித இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக, தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வதற்காக, சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வரும் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை, சட்டப்பேரவை கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால், சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கேள்வி நேரம் உண்டு என்றும், கூட்டம் தொடங்கும் நாளில் இருந்து 72 மணி நேரத்துக்கு முன் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது அவசியம் எனவும் கூறினார். 

Exit mobile version