உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான இறுதிகட்ட பணிகள் தீவிரம்

சென்னையில் நாளை தொடங்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க பல்வேறு நாடுகளுக்கு சென்று தொழில் முனைவோர்களுக்கு அரசு சார்பாக அழைப்பும் விடுக்கப்பட்டது. இதற்காக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிரமாண்ட அரங்கம் தயாராகி வருகிறது.

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மாநாட்டிற்கான இறுதி கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து, ஏராளமான தொழில் முனைவோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வர்த்தக மையத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version