தமிழக சுகாதாரத்துறை குறித்து நிதி ஆயோக் தவறான தகவல்களை பதிவு செய்துள்ளது

தமிழக சுகாதாரத்துறை குறித்து நிதி ஆயோக் தவறான தகவல்களை பதிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேரவையில் தெரிவித்துள்ளார். திமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், தமிழகத்தில் 99 சதவிகித பிரசவங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில்தான் நடைபெறுவதாக விளக்கம் அளித்தார்.

நிதி ஆயோக்கில் தமிழக சுகாதாரத்துறை குறித்து தவறான பதிவுகள் இருப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

Exit mobile version