புல்வாமா பகுதியில் 18 மணி நேரம் நடந்த சண்டை முடிவுக்கு வந்தது

காஷ்மீரில் புல்வாமா பகுதியில் 18 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சண்டை முடிவுக்கு வந்த நிலையில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புல்வாமா மாவட்டத்தின் பிங்லான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்தச் சண்டை 18 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சண்டை முடிவுக்கு வந்தது.

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட கம்ரான் உள்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் வீர மரணம் அடைந்தனர்.

Exit mobile version