மீண்டும் புல்வாமா போன்று ஒரு தாக்குதல் நடைபெறலாம்: இம்ரான் கான் எச்சரிக்கை

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவு நீக்கப்பட்டதால் மீண்டும் புல்வாமா போன்று ஒரு தாக்குதல் நடைபெறலாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவிற்கு சூசகமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சட்டம் 370வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவின் இந்த நடவடிக்கைகளை நிராகரிப்பதாக அறிவித்தது.

இந்நிலையில், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவு நீக்கப்பட்டதால் மீண்டும் புல்வாமா போன்று ஒரு தாக்குதல் நடைபெறலாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version