லாரி வாடகையை தர மறுக்கும் நவீன அரிசி ஆலை உரிமையாளர்களை கண்டித்து போராட்டம்

லாரி வாடகையை தர மறுக்கும் நவீன அரிசி ஆலை உரிமையாளர்களை கண்டித்து, திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், திறந்தவெளி சேமிப்பு கிடங்கு மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து தனியார் நவீன அரிசி ஆலைகளுக்கு நெல் மூட்டைகள், நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக அரவைகாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில், இதற்கு அரசு தரப்பில் தரப்படும் வாடகையை தர மறுக்கும் தனியார் நவீன அரிசி ஆலை உரிமையாளர்கள், தங்கள் சொந்த லாரிகள் மூலம் அரவைக்காக நெல் எடுத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக 3 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட லாரிகள் ஓடாமல் அங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version