பெண் யானை ஒன்று மர்மமான முறையில் இறப்பு

தேனி மாவட்ட கம்பம் அருகே பெண் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் அருகிலுள்ள சுருளியில், கைலாயநாதர் குகை ஒன்று உள்ளது. கம்பம் கிழக்கு வனப்பகுதியில் உள்ள குகைக்கு அருகில் பிறந்து 5 மாதமே ஆன பெண் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். உணவு தேடி சென்றபோது தவறி கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயத்தில் இந்த யானை உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது.

Exit mobile version