ஹெலிகாப்டர் மூலம் திருமண ஊர்வலத்தை நடத்திய மணமகள் தந்தை

ராஜஸ்தானில் திருமண ஊர்வலத்தை ஹெலிகாப்டர் மூலம் நடத்தி மணமகளின் தந்தை அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜுன் ஜு நு அருகே அஜித் புராவைச் சேர்ந்த ரீனாவுக்கும் அருகிலுள்ள சிதாவா கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் லம்பாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு ஹெலிகாப்டரில் செல்ல வேண்டுமென்ற தன் விருப்பத்தை தந்தையிடம் ரீனா தெரிவித்துள்ளார். மகளுடைய விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக அவருடைய தந்தை ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்தார். மணமக்கள் இருவரும் ஹெலிகாப்டரில் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version