தண்ணீர் வசதி செய்து கொடுத்த முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

விளைநிலங்களுக்கு பைப் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, கடையநல்லூர் பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரை அடுத்துள்ள வீரசிகாமணியில் 2 ஆயிரம் ஏக்கருக்குமேல் விளைநிலங்கள் உள்ளன. இங்குள்ள பெரிய குளத்தில் இருந்து, விளைநிலங்களுக்கு பைப் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர், 17 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தண்ணீர் குழாய் அமைக்க ஏற்பாடு செய்தார். தண்ணீர் பைப் அமைக்கப்பட்டது தொடர்பாக சென்னை வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

Exit mobile version