கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயி தற்கொலை

கேரள மாநிலம் திருச்சூரில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தினால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்

திருச்சூரைச் சேர்ந்த ஓசூப் என்ற விவசாயி வாழை விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு வருடங்களாக பெய்த தொடர்மழை மற்றும் வெள்ளத்தினால் வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயி நஷ்டத்தை சந்தித்துள்ளார். பணத்தை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் வங்கிகள்  அவரை கடன் கேட்டு மிரட்டியாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Exit mobile version