சேலத்தில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி என்கவுன்டர்

சேலத்தில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

சேலம் மாவட்டம் காரியப்பட்டியில் பல குற்ற வாழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கதிர்வேல் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் போலீசார் அவர் தங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது ரவுடி கதிர்வேல் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியை கத்தியால் குத்தினார். இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், கதிர்வேல் உயிரிழந்தார். சேலத்தில் கடந்த சில நாட்களாக 30க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்ட நிலையில், ரவுடி கதிவேலை போலீசார் என்கவுன்டர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ரவுடி கதிவேல் திமுகவை சேர்ந்தவர் என்பதும், அவர் திமுக கொடியுடன் காரில் வலம் வந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Exit mobile version