இறால் விலை கடும் வீழ்ச்சி – உரிய விலை கிடைக்க மீனவர்கள் கோரிக்கை

இறால் விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் ராமேஸ்வரம் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர். ராமேஸ்வரத்தின் பிரதான தொழிலாக மீன்பிடித் தொழில் உள்ளது. படகுகளின் எண்ணிக்கை பெருகியதாலும், இலங்கை கடற்படையின் அத்துமீறல்களாலும் மீன்பிடித் தொழில் நலிவடைந்து வருகிறது.

கஜா புயல் மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் இருந்த நிலையில், கடந்த மாதம் 17ம் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

மீன்வளம் நிறைந்த பாக்ஜலசந்தி கடற்பகுதியில் மீன்பிடிக்கச்சென்றபோது,இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் குறைவான அளவே இறால் கிடைத்ததாகவும், கிலோவுக்கு 700 முதல் 800 ரூபாய் வரை விற்பனையான இறால், தற்போது 500 ரூபாய்க்கு விற்றதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

மேலும், இறாலுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக அரசுக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

 

Exit mobile version