ராஜஸ்தான்,தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் -வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் இன்று ஒரேகட்டமாக நடைபெறுகிறது. தேர்தலையொட்டி இந்த மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர், போலீசார் உள்ளிட்டோர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு மாநிலங்களிலும் காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு துவங்கியுள்ளது. தெலங்கானாவில் வாக்குப்பதிவு துவங்கியது முதல் மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். காலை 10 மணி நிலவரப்படி தெலங்கானாவில் 10 புள்ளி ஒன்று 5 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, நடிகர்கள் சிரஞ்சீவி தனது குடும்பத்தினருடன் வாக்கை பதிவு செய்தார்.

Exit mobile version