தேர்தல் என்பது அக்னிப்பரிட்சை போன்றது – அமைச்சர் தங்கமணி

தேர்தல் என்பது அக்கினி பரிட்சை போன்றது என்றும் ஒருபுறம் எதிரியுடனும், ஒருபுறம் துரோகியுடனும் போராடிக் கொண்டிருக்கிறோம் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் புரட்சித்தலைவி அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தேர்தல் என்பது அக்கினிப் பரிட்சை போன்றது என்றும் ஒருபுறம் எதிரியுடனும், மற்றொரு புறம் துரோகியுடனும் போராடிக் கொண்டிருக்கிறோம் எனக் கூறினார். தேர்தலில் வெற்றி பெற்று விட்டால், எதிரிக்கும், துரோகிக்கும் இனி இங்கு வேலை இல்லை என்று அவர் தெரிவித்தார்.

Exit mobile version