மூன்று தொகுதிகளின் கள நிலவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது

ஒட்டபிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளின் கள நிலவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் கோரியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை சித்திரைத் திருவிழா தொடர்பாக முழுமையான விவரங்கள் அடங்கிய அறிக்கையை மாவட்ட தேர்தல் அதிகாரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சமர்ப்பிப்பார் என்று தெரிவித்தார். தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 57 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வரும் 15 ஆம் தேதி 100 கம்பெனி துணை ராணுவ படையினர், தமிழகம் வர உள்ளதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்தார். மதுரையை போன்று திருவண்ணாமலையில் தேர்தல் தேதியின் போது பவுர்ணமி விழா கொண்டாடப்பட இருப்பதாக மனு கிடைத்திருப்பதாகவும், அது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version