வரும் 27 ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்- சத்ய பிரதா சாஹூ

தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி வரை தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்

மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் மார்ச் 10ம் தேதி முதல் அமலில் இருந்து வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகள், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், 4 தொகுதி இடைத்தேர்தல் வரும் 19 ம் தேதி நடைபெற உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க இருப்பதாக தெரிவித்துள்ள சத்யபிரதா சாஹூ, தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் 27ம் தேதி வரை நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

Exit mobile version