158 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டாம் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிரசாரம் நிறைவடைந்தது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 158 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் திங்களன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 5 மணிக்குப் பிறகு தேர்தல் நடைபெறும் ஊரகப் பகுதிகளில் வெளியாட்கள் யாரும் இருக்கக் கூடாது என மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் ஊரகப் பகுதிகளில் இன்று மாலை 5 மணி முதல் 30ஆம் தேதி மாலை 5 மணி வரை மதுக் கடைகளை மூட வேண்டும் எனவும் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. தேர்தல் நடைபெறும் பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களில் மதுபானங்கள் விற்பனை செய்வதோ, எடுத்துச் செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது.