தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது

158 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டாம் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிரசாரம் நிறைவடைந்தது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 158 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் திங்களன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 5 மணிக்குப் பிறகு தேர்தல் நடைபெறும் ஊரகப் பகுதிகளில் வெளியாட்கள் யாரும் இருக்கக் கூடாது என மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் ஊரகப் பகுதிகளில் இன்று மாலை 5 மணி முதல் 30ஆம் தேதி மாலை 5 மணி வரை மதுக் கடைகளை மூட வேண்டும் எனவும் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. தேர்தல் நடைபெறும் பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களில் மதுபானங்கள் விற்பனை செய்வதோ, எடுத்துச் செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version