இந்து மத பழக்கவழக்கங்களை குறைகூறும் திமுகவினர், திண்டுக்கலில் இந்து முறைப்படி நல்ல நேரம் பார்த்து, ஆரத்தி எடுத்து, தேங்காயை உடைத்து பிரசாரத்தை துவக்கியதன் மூலம் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.
வாக்குகள் வேண்டும் என்றால் எந்த வேடம் போடவும் தயாரான கட்சி திமுக. இந்து மக்களின் வாக்குகள் வேண்டும் என்பதற்காக, இந்து மதச் சடங்குகளை பின்பற்றுவதும், இந்து மதத்தை விமர்சித்தால், பிற மதத்தினர் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற தவறான நம்பிக்கையில், வேடமிடுவதும் திமுகவினருக்கு கை வந்த கலை. இந்நிலையில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வேலுச்சாமி, திண்டுக்கல் குமரன் திருநகர் பகுதியில் இந்து முறைப்படி நல்ல நேரம் பார்த்து, ஆரத்தி எடுத்து, தேங்காயை உடைத்து பிரசாரத்தை துவங்கினர். இதனைக் கண்ட பொதுமக்கள் திமுகவின் இரட்டை வேடத்தை பார்த்து முகம் சுளித்தனர். மேலும் காட்டாஸ்பத்திரி அருகே ஐ.பெரியசாமி பிரசாரம் செய்துகொண்டிருந்தபோது, திமுகவினர் அவரது பேச்சை கேட்காமல் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். இதனால் வேட்பாளர் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் அங்கிருந்து வேகமாக கிளம்பிச்சென்றனர்.