கரூரில் ரவுடி போல் கல்வீசி தாக்குதல் நடத்தும் திமுக பெண் நிர்வாகி

கரூரில் அதிமுகவினர் மீது திமுகவைச் சேர்ந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் கவிதா கணேசன் கல்வீசி தாக்குதல் நடத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளது. கரூரில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அதிமுகவினர் மீது வன்முறையை ஏற்படுத்தும் நோக்கில் திமுகவினர் கற்களை வீசியும், கட்டைகளை கொண்டும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 அதிமுக நிர்வாகிகள் படுகாயமடைந்தனர். 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் கவிதா கணேசன் அதிமுக பிரசார வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

திமுகவின் பெண் நிர்வாகியே ரவுடிபோல் முன்னின்று வன்முறையை நிகழ்த்தியது, அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும் செந்தில் பாலாஜியின் தூண்டுதலின் பேரிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Exit mobile version