திமுகவினர் ஏழையைத்தான் ஒழிப்பார்கள், ஏழ்மையை அல்ல : ராமதாஸ்

திமுகவினர் வசனங்கள் மட்டும் தான் பேசுவார்கள் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்டினார். பெரம்பலூரில் அதிமுக கட்சியின் வேட்பாளர் என்.ஆர். சிவபதியை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் திமுகவினர் வசனங்கள் தான் பேசுவார்கள் என்றும், செயல்முறை படுத்தமாட்டார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் திமுகவினர் ஏழ்மையை ஒழிப்பதாக சொல்வார்கள் என்றும், ஆனால், ஏழையைத்தான் ஒழிப்பார்கள் விமர்சித்தார். இந்நிகழ்வில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version