பதவி இல்லாமல் திமுகவினர் வெறி பிடித்து திரிகின்றனர்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கடந்த பத்து ஆண்டுகளாக பதவி இல்லாமல் திமுகவினர் வெறி பிடித்து திரிவதாக வருவாய்த்துறை அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார்.

மதுரை மாவட்டம் செக்காணூரணியில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா-வின் 72 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனையடுத்து விழா மேடையில் பேசிய அவர், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க எங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என நேருக்கு நேர் தன்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா எனக் கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த பத்து ஆண்டுகளாக பதவி இல்லாமல் திமுகவினர் வெறி பிடித்து திரிவதாகவும் சாடினார்.

Exit mobile version