ஆட்சிக்காகவும் கூட்டணிக்காகவும் இரட்டை வேடம் போடும் கட்சி திமுக-அமைச்சர் ஜெயக்குமார்

ஆட்சிக்காவும் கூட்டணிக்காகவும் இரட்டை வேடம் போடும் கட்சி திமுக என்றும், மத்தியிலும் மாநிலத்திலும், ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற திமுகவின் கனவு பொய்த்து விட்டதாகவும் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.

சென்னையில், தேமுதிக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஆட்சிக்காகவும் கூட்டணிக்காகவும் இரட்டை வேடம் போடும் கட்சி திமுக என்று விமர்சித்தார். மத்தியிலும் மாநிலத்திலும், ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற திமுகவின் கனவு பொய்த்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version