திண்டுக்கல்லில் ஏழை விவசாயிக்கு திமுக பிரமுகர் கொலை மிரட்டல்

திண்டுக்கல் அருகே அப்பாவி ஏழை விவசாயிக்கு திமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேடசெந்தூர் அருகே ஆத்துபட்டியைச் சேர்ந்த வேலம்மாள் என்னும் விவசாயப் பெண்மணியில் நிலத்தில், திமுகவை சேர்ந்த சந்தானம் என்பவர், இரவு நேரங்களில் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த, வேலம்மாளை திமுகவைச் சேர்ந்த சந்தானம் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

சாதிப் பெயரை கூறி, திமுகவினர் இழித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் வேலம்மாள் தனது குடும்பத்துடன் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் மீண்டும் தஞ்சமடைந்தார்.

Exit mobile version