“தி.மு.க. ஒரு கட்சி அல்ல, அது ஒரு கந்து வட்டிக்கடை” – அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

தி.மு.க. ஒரு கட்சி அல்ல, அது ஒரு கந்து வட்டிக்கடை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த பனையபுரத்தில் அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் முகாம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துக்கொண்டு, பாசறையில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கிய அரசு அ.தி.மு.க. அரசு என்று கூறிய அமைச்சர், இளைஞர்கள், பெண்கள் அ.தி.மு.க.வை நம்பி வருவதாகக் தெரிவித்தார். திமுக ஆட்சியில் நில அபகரிப்பு அதிகளவில் நடைபெற்றதாக அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார்.

Exit mobile version