"விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்தது திமுக தான் "

இந்த அரசும் முதல்வரும் எது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

தஞ்சை அண்ணை சத்தியா விளையாட்டு மைதானத்தில் 13 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கான மாநில கூடைபந்து போட்டியை வேளாண்மை துறை அமைச்சர் துரைகண்ணு மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் பரசுராமன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்தது திமுகதான் எனவும் அதுவும் அதனுடைய தலைவர் அப்போதிய முதல்வர் கருணாநிதி தான் என நீதிபதியயே சொல்லி இருப்பதாக கூறினார்.

மேலும் எதிர் கட்சியை சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக பதவி ஆசையில் சில வார்தைகளை பயன் படுத்துவார்கள் என்றும் அதில் இதுவும் ஒன்று எனவும் குறிப்பிட்டார்.

மேலும், இந்த அரசும் முதல்வரும் எது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version