ஸ்பெக்ட்ரம் ஊழலால் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியது திமுக

இலங்கை தமிழர் படுகொலை, 2ஜி ஊழல் போன்ற விவகாரங்களால் தமிழர்களுக்கு தலை குனிவை ஏற்படுத்திய திமுக-காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என்று துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். திண்டுக்கல் வேடசந்தூர் ஒன்றியத்தில் பொது மக்களை சந்தித்து குறைகளை அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்ததால் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, எம்.பி கனிமொழி ஆகியோர் சிறை சென்று தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டார்.

Exit mobile version