டோக்கன் கொடுத்து கூட்டம் கூட்டிய திமுகவினர்

ராஜபாளையத்தில், திமுக எம்.பி. கனிமொழியின் பிரசாரக் கூட்டத்தில், டோக்கன் கொடுத்து திமுகவினர் கூட்டம் கூட்டிய சம்பவம் முகம் சுளிக்க வைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், திமுக எம்.பி கனிமொழி வருகையையொட்டி, திமுகவினர் பிரசார கூட்டத்தை ஏற்பாடு செய்தனர். இதில் அதிக கூட்டத்தை கூட்டுவதற்காக, திமுக உள்ளூர் கட்சி நிர்வாகிகள், சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி, கூட்டத்திற்கு அழைத்து வந்தனர்.

கூட்டத்தில் பங்கேற்க 500 ரூபாய் தருவதாகக் கூறி, ஒவ்வொருவர் கையிலும் டோக்கன் கொடுத்த திமுகவினர், கூட்டம் முடிந்தவுடன் 100 ரூபாய் மட்டும் கொடுத்து ஏமாற்றியதாக வந்தவர்கள் குமுறியுள்ளனர். பேசிய தொகையை வழங்காத நிலையில், உச்சி வெயிலில் அமர வைத்ததால் பலர் அதிருப்தி அடைந்தனர்.

Exit mobile version