கற்பனை செய்ய முடியாத ஊழலை செய்தது திமுக…

யாரும் கற்பனை செய்ய முடியாத ஊழலை செய்தது திமுக என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர். வேணுகோபால் மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வைத்தியநாதன் ஆகியோரை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 2011 ஆண்டு முதல் அதிமுக ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அதிமுக கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதிகளை வெல்வது நிச்சயம் என்றார்.

யாரும் கற்பனை செய்ய முடியாத ஊழலை செய்தது திமுக என்றும் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலுக்கு காங்கிரஸ் கட்சியும் உடந்தை என்று சரத்குமார் குற்றம்சாட்டினார்.

Exit mobile version